சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ 8 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசியலில் ரவுடிகள் புகுந்ததால்தான் கொலை போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.
எல்லா கட்சியிலும் ரௌடிகள் புகுந்துள்ளனர். பெண்களும் ரௌடிகளாகியுள்ளனர் என்பது சமீபத்தில் நடந்த கொலை சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது.
சாதாரண சமுதாயத்தை சார்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்கள் தான் அதிக அளவில் சுடப்படுகிறார்கள்.
பல உண்மைகள் வெளி வராமல் தடுப்பதற்காக கூட என்கவுண்டர் நடக்தப்படுகிறதா? என்ற சந்தேகம் வருகிறது என்றவர், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பழைய பகையாகவோ, அல்லது பழைய விரோதமாகவோ இருக்கலாம்?அரசியல் காரணத்திற்காக என கூற முடியாது என்றார். மேலும்,மின் கட்டண உயர்வு தேவை இல்லாதது.
மக்களின் மேல் பாரத்தை சுமத்தி இருக்கக் கூடாது என்ற கார்த்தி சிதம்பரம், கட்சியில் புதிதாக சேர்ப்பவர்கள்,பதவி கொடுக்கப்படுவர்களின் பின்னணி குறித்து கட்சி மேலிடம் ஆலோசிக்க வேண்டும் என்றார்.
எதார்த்தமாக நடக்கும் சம்பவங்களுக்கு காவல்துறை எதுவும் செய்ய முடியாது.ஆனால்,
கூலிப்படையினரை தடுக்க காவல்துறையினரால் முடியும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.