திருவாரூர் ; மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத விரக்தியில் வலங்கைமானில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, மேல்முறையீடு செய்தும், இதுவரை அதற்கான முடிவு தெரியவில்லை எனக் கூறி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து 25க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில் பத்து எருத்துக்காரத் தெரு, நடுத்தெரு, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும், இதற்காக பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அலைய வேண்டி உள்ளதாகவும் கூறி, 14வது வார்டு கவுன்சிலர் செல்வராணி தலைமையில் இந்த பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து விளக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.