வசதியானவங்களுக்கே ரூ.1000 வந்திருக்கு… சொன்னபடி, வாக்குறுதிய நிறைவேத்தனும்… தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா..!!
தேனி ; தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என ஏராளமான பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதியாக திமுக அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சரும் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளை கண்டறிந்து அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த ஆயிரம் ரூபாய், பாதி பெண்களுக்கு மட்டும் கிடைத்துள்ளதாகவும், ஏராளமான பெண்களுக்கு கிடைக்கவில்லை என்றும், தகுதியுள்ள ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் கிடைக்கவில்லை என்றும், தகுதி வாய்ந்த வசதி படைத்தவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கிடைத்திருப்பதாக குற்றச்சாட்டாக கூறினார்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மகளிர் கடன் பெற்றுள்ளதால் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிராகரிக்கப்பட்டதாக கூறுவதாக பெண்கள் கூறுகின்றனர். மேலும், அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கொடுங்கள் இல்லை என்றால், அனைவருக்கும் ரத்து செய்து விடுங்கள், என ஆயிரம் ரூபாய் கிடைக்காத பெண்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.