சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் பாலியல் சீண்டல்.. வடமாநில இளைஞருக்கு தர்ம அடி : பழனியில் பரபரப்பு..!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமி தியேட்டர் அருகில் போதையில் வந்த வட மாநில இளைஞர் பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெண் ஒருவர் கூச்சலிட்டு ஓடியுள்ளார். இதை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி போதையில் இருந்த நபரை அடித்து உதைத்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த பழனி நகர காவல் நிலைய போலீசார் வட மாநில இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் பீகாரைச் சேர்ந்த பாஸ்வான் என்பதும் பழனி அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாக முதல்கட்மாக தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வட மாநில இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.