தமிழகம்

’தவெகவில் சாதி பார்க்குறாங்க..’ விஜய் உள்ளே இருக்கும்போது வெளியே குமுறிய தொண்டர்கள்!

சாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

சென்னை: இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட தவெகவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் மாநாடு நேரத்தில் மூன்று நாட்கள் பேருந்திலே தூங்கி எழுந்து உழைத்துள்ளோம். கடந்த ஒரு வருடமாக சென்னைக்கு, கட்சி அலுவலகத்துக்கு வந்துவந்து செல்கிறோம்.

எங்களுக்கு நியாயம் வேண்டும். மாவட்டச் செயலாளரை நியமிக்கும்போது, ஒன்றியம், நகரம் அளவில் உள்ள பொறுப்பாளர்களிடம் கலந்து ஆலோசித்து பதவி வழங்க வேண்டும். BC பிரிவினருக்கு பதவி வழங்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்தவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அவரிடம் சென்று கேட்டால், நான் எங்க ஆளுக்குத்தான் (BC) பொறுப்பு போடுவேன், உங்களுக்கு (SC) எல்லாம் பொறுப்பு வழங்க மாட்டேன் எனக் கூறுகிறார். ஒன்று, இதற்கு என்ன தீர்வு எனத் தெரிய வேண்டும், அல்லது எங்களுக்கான பொறுப்பு வேண்டும். காசை வாங்கிக் கொண்டு பொறுப்பு வழங்குகின்றனர்” என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்டத்தில் தவெக பொறுப்புகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வாங்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில், காசு வாங்கிக் கொண்டு பொறுப்பு வழங்கினால், இங்கு இடம் கிடையாது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!

மேலும், கடந்த பிப்ரவரியில் கட்சி தொடங்கிய விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை அக்டோபரில், விழுப்புரத்தில் நடத்தினார். அப்போது, ஊழலுக்கு எதிரான குரலை விஜய் முன்வைத்தார். ஆனால், கட்சிக்குள்ளே காசு வாங்கும் செய்திகள் வெளியாவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.