வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுபா என்பவர் கடந்த 15-நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு சென்றபோது அங்கு உள்ள “டி மார்ட்” சூப்பர் மார்க்கெட்டில் தனது குழந்தைக்கு சாக்கோ சாக்லேட் ஓட்ஸ் வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சாக்கோ சாக்லேட் ஓட்ஸை தனது குழந்தைக்கு சுடு பாலில் கலந்து கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்க: ’என்ன அண்ணாமலை.. உன்னையும் சேர்த்துதான்..’ நீ கூட களத்துக்கு போறதில்ல.. அன்புமணி பரபரப்பு பேச்சு!
அப்போது அதனை உண்ட சுபாவின் இரண்டரை வயது குழந்தை வாயில் ஏதோ நெளிகிறது என்று பயந்துபோய் கீழே துப்பியுள்ளது. கீழே துப்பிய சாக்கோ சாக்லேட்டில் பெரிய அளவிலான புழு கரு நிறத்தில் ஊர்ந்து சென்றதை கண்ட சுபா பயந்து போய் உள்ளார்.
சாக்கோ சாக்லேட் ஓட்ஸ் தயாரிப்பு தேதி 22.10.2024 காலாவதி தேதி 19.07.2025 என அச்சிடப்பட்ட நிலையில் காலாவதி ஆகாத சாக்கோவில் சாக்லேட் புழு இருந்தது அதிர்ச்சி அளிக்ககூடிய ஒன்றாக உள்ளதாகவும், வெதுவெதுப்பான பாலில் கூட புழு சாகாமல் இருந்துள்ளது எனக்கூறி சுபா ஆன்லைன் மூலமாக உணவு பாதுகாப்புத் துறைக்கும் நுகர்வோர் மன்றத்திற்கும் புகார் அளித்துள்ளார்.
இது போன்ற தின்பண்டங்களை வாங்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும் என்று சுபா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.