ஆகஸ்ட் மாதத்திற்கான நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் அனைத்து ரகத்திற்கும் கிலோவிற்கு 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
பனியன் தயாரிக்க அடிப்படை தேவயான நூலானது, கடந்த ஜூன் மாதம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் 40 ரூபாய் குறைக்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு மாதமான ஆகஸ்டில் நூல் விலை கிலோவிற்கு மேலும் 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.333-க்கும், 34-ம் நம்பர் ரூ.375-க்கும், 40-ம் நம்பர் ரூ.395-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.325-க்கும், 34-ம் நம்பர் ரூ. 365-க்கும், 40-ம் நம்பர் ரூ.385-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நூல் விலை ரகத்திற்கு ஏற்றபடி 320 ருபாய் முதல் 400 ருபாய் வரை விற்கப்படுகிறது. அனைத்து வகையான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 30 குறைந்துள்ளதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.