மீண்டும் பார்ட்டியில் லூட்டி.? நண்பர்களுக்கு கண்டிஷன் போட்ட யாஷிகா..!

Author: Rajesh
26 May 2022, 3:39 pm
Quick Share

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர தொடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது நடந்த விபத்து ஒன்றில் சிக்கி யாஷிகா படுகாயமடைந்தார். தொடர்ந்து எழுந்திரிக்க முடியாமல் பல மாதங்கள் இருந்தார். இந்த விபத்தில் அவரது தோழி இறந்தார்.

அந்த சம்பவத்திற்கு பின்னர் சில காலம் பார்ட்டிக்கு போகாமல் இருந்த நடிகை தற்போது மீண்டும் ஆட்டம் போட தொடங்கி விட்டாராம். புதிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், மீண்டும் தனது ஆண் நண்பருடன் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டாராம் யாஷிகா.

ஆனால், முன்பு நடந்தது போல முழு குடி போதையில் தாறுமாறாக வாகனத்தை செலுத்த மாட்டேன் என்ற முடிவில் மட்டும் முழு கவனத்துடன் இருக்கிறாராம். அதனால் பார்ட்டிக்கு வராத, குடி பழக்கம் இல்லாத ஒரு கார் டிரைவரை எப்போதுமே யாஷிகா அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.

Views: - 578

0

0