தமிழகம்

கபில் தேவ் மீது துப்பாக்கிச்சூடு முயற்சி.. தோனி யார் தெரியுமா?.. யுவராஜ் சிங் தந்தை பகீர் தகவல்!

தன்னை நீக்கிய அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில் தேவை சுட முயற்சித்தேன் என யுவராஜ் சிங்கின் தந்தை கூறியுள்ளார்.

மும்பை: இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில், “கபில் தேவ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது காரணமின்றி என்னை அணியில் இருந்து நீக்கினார்.

எனவே, கோபத்தில் கபில்தேவைச் சுடுவதற்கு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது, கபில்தேவ் அவரது தாயாருடன் வெளியே வந்தார். கபில்தேவ்விடம் ‘உங்கள் அருகில் பக்திமிக்க தாயார் இருப்பதால் துப்பாக்கியால் சுடவில்லை’ என்று சொல்லி அங்கிருந்து திரும்பினேன்.

என்னை நிராகரித்ததால், மீண்டும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என கோபம் அடைந்தேன். எனவே, எனது மகன் யுவராஜ் சிங்கை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுத்த முடிவு செய்தேன்” எனக் கூறியுள்ளார். யோக்ராஜ் சிங்கின் இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரம், “தோனியை மிகவும் உற்சாகமான மோட்டிவேட் செய்யக்கூடிய கேப்டனாக நான் பார்க்கிறேன். அவரால், மற்ற வீரர்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்குச் சொல்ல முடியும். அதுமட்டுமல்லாமல் தோனியிடம் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் விக்கெட்டை படித்து பந்துவீச்சாளர்களுக்கு எங்கு பந்து வீச வேண்டும் என்று சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்த வீட்டுக்கு வந்து நீ என்ன கிழிச்ச? சௌந்தர்யா – சுனிதா குடுமிப்பிடி சண்டை : வைரலாகும் வீடியோ!!

முன்னதாக, “என்னுடைய மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விட்டதற்காக தோனியை எப்போதும் நான் மன்னிக்க மாட்டேன்” என்பது உள்பட தோனிக்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்த யோக்ராஜ் சிங், தற்போது தோனியின் நிறைகளைக் கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.