ஒன்றிய அரசிடம் இருந்து நீங்கள் நிதி வாங்கிக் கொடுங்க.. நிருபர்கள் சந்திப்பில் ஆவேசமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டியில் புதிய மருத்துவத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடப் பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவத்துறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார துறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்வதில் பெரிய மாவட்டங்களை விட தருமபுரி மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்த பின் இதுவரையில் ஆறு பேர் தர்மபுரி மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்ட மக்களிடையே மனிதாபிமானமும், மனித நேயமும் அதிகமாக உள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தர்மபுரி மாவட்டம் ஒரு புதிய வரலாறை படைத்துள்ளது.
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் அதிக கன மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு அதற்கான நிவாரண பணிகள் நடைபெற்று வரும் வேளையில் தென் மாவட்டங்களில் கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்த நான்கு மாவட்டங்களில் 54 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மழை நீர் புகுந்துள்ளது.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகுந்த மழை நீரை மின் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றி, தற்போது அது வடிந்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தளம் வரையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தமிழக அரசு உடனடியாக அங்கு மருத்துவ கல்வி இயக்குனரை அனுப்பி வைத்து, ஐ சி யு வில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அங்கு தொடர்ந்து மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை போன்று தென் மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பயன்பாட்டில் உள்ளது.ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் ஒரு உதவியாளர் என நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளைக்கும் தேவைக்கு ஏற்ப ஒரு இடம் அல்லது இரண்டு, மூன்று இடங்களில் முகாமிட்டு அங்குள்ள மக்களுக்கு மழைக்கால நோய்கள் வராதவாறு மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரும் அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். என்றார்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூபாய் 6000 போதுமானத கூடுதல் நிதி வழங்கப்படுமா என கேள்வி எழுப்பிய போது வேண்டுமென்றால் நீங்கள் ஒன்றிய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுங்கள் என்றும், தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் 11 வருடங்களாக பொறுப்பு மருத்துவ அலுவலராக ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இதே போன்று 13 வருடங்களாக வட்டார மருத்துவ அலுவலராக ஒருவர் பணியாற்றி வருகிறார் என்று கேள்வி எழுப்பியபோது ஆவேசமாக பதில் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.