கூட்டுப் பாலியல் வன்கொடுமை: சிகிச்சை மறுக்கப்பட்ட பெண்: மருத்துவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், விடுமுறைக்காக அந்த பெண் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டுக்கு வந்த கவிதாசன் (25) என்ற இளைஞர் வீட்டில் இருந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். தொடர்ந்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு மிரட்டி அழைத்துள்ளார்.அங்கு அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரத்தநாடு ஏ.எஸ்.பி சகுனாஸ் மற்றும் எஸ்.பி ஆசிஷ் ராவத் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கவிதாசன், திவாகர் (27), பிரவீன் (20), (17) வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது ஏன் என ஒரத்தநாடு உரிமையியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்ய கூடாது எனவும் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது குறித்து வரும் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Sudha

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

12 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

12 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

13 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

14 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

15 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

15 hours ago

This website uses cookies.