கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வருவதாக கேரளா கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை – வாளையார் எல்லையில் கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் இளம் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் வைத்திருந்த பையில் கிலோ கணக்கில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பிடிபட்ட நபர்கள் மலப்புரத்தை சேர்ந்த ஆல்பின் மற்றும் கோழிக்கோடு பண்ணியங்காரை பகுதியை சேர்ந்த ஷீபா என்பதும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஷீபா பெங்களூரு சென்று ஆல்பின் மற்றும் வேறு ஒரு இளைஞருடன் சேர்ந்து கஞ்சா கடத்தி வர திட்டமிட்டதும் தெரியவந்தது.
மேலும் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு கஞ்சாவை எடுத்து வந்த இருவரும் கோவையிலிருந்து கேரளா அரசு பேருந்து மூலம் கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த கலால் அதிகாரிகள் 14.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.