கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் நேற்று இரவு அவருடைய மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக அவர் வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டு உள்ளார்.
ஆனால் குறி தவறி பக்கத்து வீட்டில் இருந்த பிரகாஷ் தலைமீது துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரகாஷ் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து கரியாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தமாக 4 பேரிடம் கரியாலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய கோழியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கோழியை சுடும்போது குறி தவறி பிரகாஷ் மீது குண்டு பாய்ந்ததா அல்லது இருவருக்கும் ஏற்கனவே ஏதாவது முன் விரோதம் உள்ளதா என்பது குறித்தும் கரியாலூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.