கோவை: கோவை அருகே தன்னுடன் வீட்டை விட்டு ஓடி வந்த காதலியை பிரித்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார்(26). பால் வியாபாரி. இவர் அதேபகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த அவர்கள் சமீபத்தில் கொடைக்கானல் சென்றனர்.
இதற்கிடையே தனது மகளை காணாது அதிர்ச்சியடைந்த பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், காதல் ஜோடி கொடைக்கானலில் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு கோவை அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
அப்போது அந்த இளம்பெண் தன்னுடைய பெற்றோருடன் செல்வதாக விருப்பம் தெரிவித்தார். இதனால் போலீசார் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சரவணக்குமார் மிகுந்த மன உளைசலுக்கு ஆளாகினார்.
காதலியை மறக்க முடியாமல் தவித்த அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.