இளம் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை தட்டி கேட்ட பெண்ணின் உறவினர்களை விறகு கட்டையால் தாக்கிய இளைஞர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தட்டாரபட்டியில் இரண்டு இளம் பெண்கள் தங்கள் வீட்டு முன்பாக இருந்த சின்டெக்ஸ் டேங்க்ங்கில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்ததாக இளம் பெண்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்தனர்.
பெண்களின் உறவினர்கள் இளைஞரை தட்டி கேட்டதால் இளைஞர் அவர்களிடமிருந்து தப்பி சென்று விட்டார். தப்பி சென்ற இளைஞர் தனது ஊரான மாரம்பாடிக்கு சென்று பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்து விறகு கட்டையால் பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கியதால் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் பலத்த காயம் அடைந்தனர்.
வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விறகு கட்டையால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் வேடசந்தூர் போலீசார் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.