மேல்மருவத்தூர் சென்ற பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு, மாலை அணிவித்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இதன்படி, அவர்கள் சுற்றுலா பேருந்து ஒன்றை அமைத்து உள்ளனர்.
இதன்படி, இவர்கள் அனைவரும் அந்த சுற்றுலா வேனில் சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு உள்ளனர். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள முப்பதுவெட்டி பகுதியில் தேநீர் அருந்துவற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தி உள்ளார்.
பின்னர், பேருந்தை ரிவர்ஸ் எடுத்து உள்ளார். அப்போது, அங்கு தாழ்வாக இருந்த மின்சாரக் கம்பி பேருந்தின் டாப் மீது உரசியதில், பேருந்தில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இந்த நேரத்தில், பேருந்தில் பயணித்து வந்த அகல்யா (20) என்ற இளம்பெண், பேருந்தின் கம்பியைப் பிடித்து உள்ளார்.
இதனால் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலே சரிந்து விழுந்து உள்ளார். இதனையடுத்து, அகல்யாவை மீட்ட உடன் வந்தவர்கள், அவரை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால், அகல்யா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இதையும் படிங்க: ’காக்கா பிரியாணியா?’.. உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை.. திருவள்ளூர் பகுதிகளில் பரபரப்பு!
இதனையடுத்து, இது குறித்து ஆற்காடு நகரப் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், ‘அகல்யா செருப்பு அணியாமல் கம்பியைத் தொட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது” என அவருடன் பயணித்த சந்தியா என்ற பெண் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.