சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் நிவேதா (27). இவரது தந்தை பாலாஜி 2000 ஆம் ஆண்டு விபத்தில் இறந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு தாய் கிருஷ்ணவேணி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இதையடுத்து ஒரகடத்தில் உள்ள தாய் மாமா வீட்டில் நிவேதாவும் அவரது சகோதரர் சந்திரபாபுவும் (25) வசித்து வந்தனர். கல்லூரி படிப்பை முடித்து இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இதையும் படியுங்க: அரசியலுக்கு வரும் பிரபல வாரிசு நடிகை… ஜெயலலிதா தான் வழிகாட்டி என பெருமிதம்!!
இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு நிவேதாவுக்கு தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. வரும் ஜனவரி 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக நிவேதா மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அம்பத்தூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்ற நிவேதா அடுக்குமாடி குடியிருப்பின் மேல் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிவேதாவின் சகோதரர் சந்திரபாபு, திருமணம் காரணமாக கணவர் வீட்டிற்கு சென்று வாழ வேண்டும் சமையல் தெரியாது, வீட்டு வேலை செய்ய தெரியாது போன்ற காரணத்தினால் தனது அக்கா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியுள்ளார்.
அத்துடன் மனநல மருத்துவரிடம் நிவேதா சிகிச்சை பெற்று வந்த நிலையில், திருமணத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அம்பத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அம்பத்தூரில் பெண் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.