தமிழகம்

சிறுவர்களை வைத்து இளம்பெண் செய்த காரியம்.. ஆந்திராவை அலறவிட்ட சம்பவம்

ஆந்திராவில் பணம் மற்றும் அரசு வேலைக்காக சொந்த சகோதரர்களைக் கொன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்நாடு: ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியைச் சேர்ந்தவர் போலராஜு. இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கோபி கிருஷ்ணா, துக்க ராமகிருஷ்ணா என்ற மகன்களும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர்.

இதனிடையே, போலராஜு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரியில் உயிரிழந்தார். இவர் பணியின் போதே உயிரிழந்ததால், அவரது குடும்பத்திற்கு 70 லட்சம் ரூபாய் பணம் அரசு சார்பில் வழங்கப்பட இருக்கிறது. மேலும், இவருக்குச் சொந்தமாக வீடும் உள்ளது.

இந்த நிலையில், வீடு மற்றும் 70 லட்சம் பணம், அரசு வேலை ஆகியவற்றைப் பெறுவதில் மூன்று பிள்ளைகள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில் மூத்த மகன் கோபி, கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். இருப்பினும், அவர் தந்தையின் அரசுப் பணி மற்றும் அவரது பணம் தனக்கே வர வேண்டும் எனக் கூறி உள்ளார்.

கிருஷ்ணவேணியும், அவரது தம்பி ராமகிருஷ்ணாவும் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்ததால், அவர்களும் தந்தையின் வேலைக்கு போட்டி போட்டு உள்ளனர். மேலும் மூவரும் பணம் பெறுவதில் உறுதியாக இருந்து உள்ளனர். இந்த நிலையில், கோபி கிருஷ்ணா, துக்க ராமகிருஷ்ணா ஆகிய இருவரும் அடுத்தடுத்து காணாமல் போயுள்ளனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கிருஷ்ணவேணியைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, தனது அண்ணன் தம்பி இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தனக்கு தெரியாது என்று, கூறியுள்ளார். ஆனால், போலீஸ் அண்ணன் கடைசியாக பேசியது கிருஷ்ணவேணியிடம் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

இதையும் படிங்க: கண்ணை மறைத்த பண வெறி.. நயன்தாராவை விளாசிய பிரபலம்!!

இதனிடையே, கிருஷ்ணவேணியிடம் தன்னையா என்ற இளைஞர் அடிக்கடி பேசி வந்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் கிருஷ்ணவேணியின் காதலன் என்றும், தனக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறி உள்ளார்.

இதனையடுத்து, மீண்டும் கிருஷ்ணவேணியிடம் விசாரித்த போது, பணத்திற்காக நவம்பர் 26ஆம் தேதி தனது தம்பியையும், டிசம்பர் 10ஆம் தேதி தனது அண்ணனையும் கொன்றதாக கூறியிருக்கிறார். மேலும், காதலனுடன் இணைந்து இந்த சதியை கிருஷ்ணவேனி நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதற்காக, தனது இன்ஸ்டாகிராமில் பழகும் 17 வயது சிறுவர்கள் 4 பேரை வைத்து, சொந்த அண்ணன் தம்பிகளைக் கொன்று, உடல்களை கால்வாயில் வீசியுள்ளனர். இதனையடுத்து, உடல்களைக் கைப்பற்றிய போலீசார், கிருஷ்ணவேனி மற்றும் அவரது காதலரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.