தமிழகம்

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் ஆலையில் பணி செய்து வந்துள்ளார்.

இளம் பெண் விக்னேஷ்வரியும், புதுக்கோட்டையைச் சேர்ந்த தீபன் (27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை பெண் வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்ததாக தெரிகிறது.

இதனால் நேற்று, விக்னேஸ்வரி வீட்டிற்கு வந்த தீபன் அவர்களது பெற்றோர்களிடம் திருமணத்திற்கு புத்தாடைகள் வாங்க தாம்பரம் செல்வதாக கூறி, விக்னேஷ்வரியை அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர், புத்தாடைகளை வாங்கிக் கொண்டு இருவரும் விக்னேஸ்வரியின் இரவு வீட்டிற்கு வந்துள்ளனர்.பின்னர் தீபன் தாம்பரத்தில் குடியிருக்கும் வீட்டிற்கு பஸ்ஸில் புறப்பட்டுள்ளார். பேருந்து மணிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், பேருந்தில் இருந்து இறங்கி விட்டதாகவும் , தன்னை வந்து அழைத்துச் செல்லும் படியும் விக்னேஸ்வரிக்கு செல்போன் மூலம் தீபன் தகவல் கொடுத்ததாக அவரது தங்கை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று இரவு அவரை அழைத்து வர விக்னேஸ்வரி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் விக்னேஷ்வரி வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் இருவரையும் தேடி உள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை விக்னேஷ்வரி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், கொளத்தூர் சுடுகாடு நுழைவாயில் முன்பு மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது போன்று இருந்துள்ளது.

அங்கு பொதுமக்கள் சென்று பார்த்த போது, இருசக்கர வாகனத்திற்கு மிக அருகிலேயே விக்னேஸ்வரி தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டு உயிர் இழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவரது பெற்றோர்கள் விக்னேஸ்வரியின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி., கீர்த்திவாசன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு செங்கல்பட்டுக்கு அனுப்பினார்.

மேலும் சம்பவம் குறித்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், விக்னேஷ்வரியின் தலை மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து விட்டு, மின்கம்பத்தில் இருசக்கர வாகனத்தில் மோதி உயிரிழந்தது போல சடலத்தை வீசி சென்றுள்ளனர்.

இளம் பெண்ணின் காதலன் தீபனின் செல்போன் தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல விக்னேஷ்வரியும், தீபன் என்பவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் கூறுகின்றனர்.

எனவே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விக்னேஷ்வரியின் உறவினர்கள் யாரேனும் ஆணவ படுகொலை செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

14 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

16 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

16 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

17 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

17 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

18 hours ago

This website uses cookies.