தமிழகம்

ரயில் தண்டவாளத்தில் கார் ஒட்டிய இளம்பெண்… தடுக்க சென்றவர்களுக்கு கத்தியை காட்டி மிரட்டிய வீடியோ!

ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நாகுலபள்ளி – சங்கரபள்ளி ரயில்வே மார்க்கத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிச் சென்றார். சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் படம்பிடிக்கவே இவர் இந்த ஆபத்தான செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ரயில் தண்டவாளத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்த காரைக் கவனித்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாகச் சுதாரித்து அவரை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்தப் பெண் அவர்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் காரை முன்னெடுத்துச் சென்றார்.

சிறிது தூரம் சென்ற பிறகு, நாகுலபள்ளி அருகே சில உள்ளூர்வாசிகள் அவரது காரைத் தடுத்து நிறுத்த முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களை மிரட்டியதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண்ணைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மது போதையில் இந்தச் செயலில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தால் பெங்களூருவில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்த பல ரயில்களை அதிகாரிகள் பாதையிலேயே நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல மணி நேரம் ரயில் போக்குவரத்து தடைபட்டது. அந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் போலீசார் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…

19 minutes ago

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

1 hour ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

2 hours ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

3 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

4 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

5 hours ago

This website uses cookies.