தமிழகம்

மரத்தால் வந்த பிரச்னை.. அண்ணன் குடும்பத்தையே காலி செய்த தம்பி!

கிருஷ்ணகிரியில் நிலத்தகராறில் அண்ணன், அண்ணியை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). மேலும், மாரிமுத்துவின் தம்பி முருகன் (35) அவரது மனைவி சிவரஞ்சனி (24). இந்த நிலையில், முருகன் வீட்டின் அருகில் உள்ள மரத்தை வழிப்பாதைக்கு இடையூறாக இருந்ததாக, அண்ணன் மாரிமுத்து மரத்தை வெட்டியுள்ளார்.

இதனால் மாரிமுத்துவுக்கும், தம்பி முருகனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து சிறை சென்று வந்துள்ளார். இந்நிலையில், முருகனுக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கப்பட்டு உள்ளது.

இதனால், முருகன் வீட்டுக்குச் செல்லும் பாதையில் மாரிமுத்து, வழியை மறித்து வாகனத்தை நிறுத்தி உள்ளார். இதனால் மாரிமுத்துவுக்கும், முருகனுக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகியோர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், மாரிமுத்து மற்றும் ருக்மணியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த கணவன் – மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், சாமல்பட்டி போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ‘சித்தா’ பட பாணியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. உடலை புதைத்த கொடூரம்!

மேலும், இச்சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய முருகன் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனியை தேடி வந்தனர். இந்த நிலையில், கொலை செய்து தப்பி ஓடிய முருகன் பவானி பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், சிவரஞ்சனியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.