மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியில் சிறு பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் போதிய அளவு மூடாமல் அலட்சியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழுவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாதை தெரியாமல் தடுமாறி பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பாலத்தின் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பியில், மணிகண்டனின் தலை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் , நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.