பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பந்தா காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற 24 வயது வாலிபர் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்று, அந்த பாடல்களில் வருவது போன்று காட்சிகளுக்கு பட்டா கத்தியுடன் வீடியோ பதிவு செய்து, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த காட்சிகள் சமூகவலைதள பக்கத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் அவர்கள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு வாலிபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அஜித் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர், அவருடைய செல்போன் மற்றும் பட்டாகத்தியை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.