பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பந்தா காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற 24 வயது வாலிபர் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்று, அந்த பாடல்களில் வருவது போன்று காட்சிகளுக்கு பட்டா கத்தியுடன் வீடியோ பதிவு செய்து, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த காட்சிகள் சமூகவலைதள பக்கத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் அவர்கள் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு வாலிபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அஜித் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர், அவருடைய செல்போன் மற்றும் பட்டாகத்தியை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.