நத்தத்தில் அருகே பிறந்தநாள் கொண்டாட்டம்… கேக்கை பட்டா கத்தியால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் எம்.கே.ராஜா (வயது 30) இவர் புதிய திராவிட கழக கட்சியின் நத்தம் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன் (ஆகஸ்ட்-17-ம் தேதி) பிறந்த நாள். அதனால் அவரது பிறந்தநாளை நண்பர்கள் சிறப்பாக கொண்டாட எண்ணி நண்பனுக்காக கேக் வாங்கி வந்தனர். அந்த கேக்கை ராஜா அவரது வீட்டின் அருகே பட்டா கத்தியில் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.
ராஜா பட்டா கத்தியால் கேக் வெட்டியதை அவரது நண்பர்கள் ரீல்ஸ் செய்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர். இது காட்சி நத்தம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக கேக் வெட்டப்பட்டுள்ளதாகவும், ராஜாவின் இந்நடவடிக்கை பொதுமக்களை மிரட்டும் தொனியில் உள்ளதாகவும் போலீசார் ராஜாவை தேடி விரைந்தனர்.
இப்படி பட்டா கத்தியால் கேக் வெட்டினால் மற்ற இளைஞர்களிடம் இது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.