நெல்லை : நெல்லையில் ஒரு தலை காதல் விவகாரத்தில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மாரி ராஜ் (32) இவர் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு மாரிராஜ் திடீரென வீட்டில் வைத்து விஷமருந்தி மயங்கி கிடந்துள்ளார்.
இதை கவனித்த அவரது குடும்பத்தினர் மாரி ராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மாரி ராஜ் உயிரிழந்தார். தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாரிராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், மாரிராஜ் ஒரு தலை காதலால் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மாரி ராஜ் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அந்த பெண் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில் மாரிராஜ் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.