ஆற்றின் நீரில் பெட்ரோல் ஊற்றி தீயை பத்த வைத்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞரின் ஆபத்தான சாகச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தலைமுறை இளைஞர்களும், சமூக வலைத்தளங்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்று சொல்லுமளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. குறிப்பாக, 2K கிட்ஸ்க்கு சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவதும், அதில் சாகசம் செய்வதும் அவர்களின் ஆகச்சிறந்த சாதனையாகவும், பிறரைக் கவரும் விஷயமாகவும் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மேலும், தாங்கள் செய்யும் சாகசங்களை படம் பிடித்து சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு அப்போது சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது. பெரிதாக சர்ச்சையை கிளப்பினால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது இல்லை என்றால் அதனை கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில், ஆற்றில் உள்ள மீன்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் வகையில், இளைஞர்கள் சிலர் ஆற்றின் நீரில் பெட்ரோல் ஊற்றுகின்றனர். பின்பு பெட்ரோல் ஊற்றி தீயை பத்த வைக்கின்றனர் அப்போது இளைஞர் ஒருவர் மேலிருந்து ஆற்றின் நீரில் பற்றி எரியும் தீயில் குதிக்கிறார். இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த காட்சியானது தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆற்றில் உள்ள மீன்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இளைஞர்கள் சிலர் ஆற்றின் நீரில் தீயை பற்றவைத்து குதித்து, அதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.