சென்னை மெரினா கடற்கரையில் திருமணத்திற்காக போட்டோ ஷூட் நடத்த வந்த போட்டோகிராபரிடம் செல்போனை பறிக்க முயன்ற கும்பல் அவரை அரிவாளால் தாக்கியுள்ளது.
சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் இளமாறன். 23 வயதான இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ ஷூட் எடுக்கும் தொழில் செய்து வருகிறார் .
இவர் இன்று காலை மெரினா கடற்கரைக்கு நண்பர் தீபக் குமார் – சோனியா தம்பதியின் திருமண நாளுக்கு போட்டோ எடுக்க வந்துள்ளார் .இவர்களுடன் நண்பர்கள் தினேஷ், விஜய், பிரபா, கார்த்தி என மொத்தம் 7 பேர் வந்துள்ளனர்.
நம்ம சென்னை பின்புறம் உள்ள மணல் பகுதியில் இவர்கள் போட்டோ ஷூட்எடுத்து வந்ததாக தெரிகிறது . அப்போது இளமாறனிடம் எந்த ஏரியா என்று கேட்டு கும்பல் ஒன்று தகராறு செய்துள்ளது. அத்துடன் அவரது செல்போனை தருமாறு கேட்டுள்ளது.
ஆனால் அவர் செல்போனை தர மறுத்ததால் , மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளமாறனை அவர்கள் மிரட்டி உள்ளனர் . அத்துடன் அவரது இடது கையை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளமாறன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது. இதுகுறித்து மெரினா கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.