தமிழகம்

இரவு வரை காதலியுடன் உல்லாசம்.. மறுநாள் வேறொரு பெண்ணுடன் திருமணம்.. சிக்கிய தீராத விளையாட்டு பிள்ளை!

முன்னாள் இரவு வரை ஒருத்தி.. மறுநாள் திருமணம் செய்ய ஒருத்தி.. வசமாக சிக்கிய இளைஞர்

காஞ்சிபுரம் நாகலத்துமேடு பகுதியைச் சேர்ந்த தேவிகா (29), தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

செய்தியாளர்களிடம் சந்தித்து விட்டு மனு கொடுக்க சென்றபோது, மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த தேவிகா, 10 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மதுராந்தக தோட்டத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

ஆனால், கார்த்திக் முறையாக குடும்பத்தை கவனிக்காமல் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு, தேவிகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது, அதே நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த வையாவூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. தேவிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகத் தெரிவித்த போதிலும், சரத்குமார் அவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி காதலிப்பதாகக் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்பில் தொடர்ந்து பேசியதின் விளைவாக, இருவரும் காதலில் விழுந்து ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு, கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்த இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர்.

தேவிகா கர்ப்பமடைந்தபோது, கருவைக் கலைக்குமாறு சரத்குமார் வற்புறுத்தியதாகக் தேவிகா குற்றம் சாட்டுகிறார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தன்னுடன் பேசிக்கொண்டிருந்த சரத்குமார், திங்கட்கிழமை வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

இது குறித்து சரத்குமாரிடம் கேட்டபோது, அவரது குடும்பத்தினர் தேவிகாவை ஆபாசமாகத் திட்டி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, தேவிகா காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்றார்.

செய்தியாளர்களிடம் பேசும்போது, சரத்குமாரை நம்பி 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியும், 3 பவுன் நகைகளையும் கொடுத்ததாகவும், சரத்குமாருக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தட்டிக்கேட்டால், சரத்குமாரின் குடும்பத்தினர் மிரட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சரத்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தான் இழந்த பொருட்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் தேவிகா கோரிக்கை வைத்தார்.

பேட்டி அளித்த பிறகு எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றபோது, அலுவலக வாசலில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.