கோவையில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்த இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவியை, சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர்: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானம் (24) என்பவர், கோவையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் கூலித் தொழிலாளியாக அங்கேயே தங்கி வேலைப் பார்த்து வந்தார். அப்போது, சந்தானத்திற்கும், அங்குள்ள அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு இஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நன்றாக காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். எனவே, பெற்றோர் சிறுமி காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: அன்று அது நடந்ததால் தான்.. திடீரென கன்னடத்தில் வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்!
இந்த விசாரணையில், சந்தானம் ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நெல்லை விரைந்து சென்ற போலீசார், பள்ளி மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், சந்தானத்தின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.