தமிழகம்

நெல்லை கோர்ட் வாசலில் இளைஞர் கோர கொலை.. 3 தனிப்படைகள் அமைப்பு!

நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர்கள் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (டிச.20) காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்ற வாசலில் இருந்து உள்ளார்.

அப்போது அங்கு திடீரென வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரைச் சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் விரட்டி உள்ளனர். பின்னர் அவர் ஒடிய நிலையில் மீண்டும் நீதிமன்ற வாயில் அருகே வந்துள்ளார். அந்த நேரத்தில், அவர் நீதிமன்ற வாசலிலே வைத்து கொடூரமான முறையில் முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதன் பின்னர் 4 பேரும் அங்கிருந்து காரில் தப்பியோடி உள்ளனர். பின்னர், இது குறித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கொலையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் தடுக்க முயன்றதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: பையோடு சென்ற கணவன்.. துரத்திய நாய்.. துண்டு துண்டான மனைவி.. குமரியில் பயங்கரம்!

இதனிடையே, இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து நீதிமன்றத்தின் அருகே உள்ள வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

8 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

9 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

9 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

10 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

10 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

11 hours ago

This website uses cookies.