தமிழகம்

நெல்லை கோர்ட் வாசலில் இளைஞர் கோர கொலை.. 3 தனிப்படைகள் அமைப்பு!

நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர்கள் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (டிச.20) காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்ற வாசலில் இருந்து உள்ளார்.

அப்போது அங்கு திடீரென வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரைச் சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் விரட்டி உள்ளனர். பின்னர் அவர் ஒடிய நிலையில் மீண்டும் நீதிமன்ற வாயில் அருகே வந்துள்ளார். அந்த நேரத்தில், அவர் நீதிமன்ற வாசலிலே வைத்து கொடூரமான முறையில் முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இதன் பின்னர் 4 பேரும் அங்கிருந்து காரில் தப்பியோடி உள்ளனர். பின்னர், இது குறித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கொலையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் தடுக்க முயன்றதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: பையோடு சென்ற கணவன்.. துரத்திய நாய்.. துண்டு துண்டான மனைவி.. குமரியில் பயங்கரம்!

இதனிடையே, இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து நீதிமன்றத்தின் அருகே உள்ள வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Hariharasudhan R

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

9 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

10 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

10 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

10 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

11 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

11 hours ago

This website uses cookies.