தமிழகம்

காரை ஏற்றி இளைஞர் கொலை.. திமுக பிரமுகரின் பேரன் கைது..!

சென்னை திருமங்கலம் பள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த அதிர்ச்சி விபத்தில் அயனாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நித்தின் சாய் உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற நித்தின் சாய் மற்றும் அபிஷேக் என்பவரை சொகுசு ரேஞ்ச் ரோவர் கார் மோதியதில், நித்தின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அபிஷேக் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விபத்தை தொடர்ந்து, போக்குவரத்து காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர்.

இறந்த மாணவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று குற்றம்சாட்டினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ரேஞ்ச் ரோவர் காரை வைத்து வேண்டுமென்றே விபத்து நிகழ்த்தப்பட்டதை உறுதி செய்தனர்.

விசாரணையில், பெண் தொடர்பான காதல் விவகாரம் இதற்கு காரணமாக இருப்பது தெரியவந்தது. பிரணவ் மற்றும் வெங்கடேசன் ஆகிய இரு கும்பல்களுக்கிடையேயான மோதலில், பிரணவ் சார்பாக சொகுசு காரில் வந்த திமுக பிரமுகர் தனசேகரின் பேரன் சந்துரு உள்ளிட்டோர் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்குவாதம் மோதலுக்கு மாறியதில், வெங்கடேசனை காரை வைத்து விரட்டி மோத முயற்சித்தனர். “யாராவது ஒருவரை கொன்றால்தான் நாம் யார் என தெரிய வரும்” என்று ஆத்திரத்தில் கூறிய சந்துரு, தாறுமாறாக காரை ஓட்டியபோது நித்தின் சாய் மற்றும் அபிஷேக் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் சந்துருவை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆரோன் என்பவர் சொகுசு காரை ஓட்டியது தெரியவந்துள்ளது, மேலும் தான் காரில் பயணம் மட்டுமே செய்ததாகவும், அபிஷேக் தரப்பை பயமுறுத்தவே அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.