தமிழகம்

கடலில் வீசப்பட்ட இளைஞர்.. சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் சகோதரர் வெறிச்செயல்!

விழுப்புரத்தில் தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரைக் கொன்று கடலில் வீசிய சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது நபருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 6ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

பின்னர், நவம்பர் 8ஆம் தேதி, புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியில் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயங்கள் உடன் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர், இது குறித்து அவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் கோட்டகுப்பம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, உயிரிழந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த நபர் வசித்து வந்த அதே பகுதியில் இருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து உள்ளார்.

இது தொடர்பாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அந்த நபருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து உள்ளது. இந்த நிலையில், சிறுமியின் சகோதரர் மது விருந்து வைப்பதாகக் கூறி அந்நபரை அழைத்துச் சென்று உள்ளார்.

இதையும் படிங்க: 2 நாட்கள் ஆண் நண்பருடன் உல்லாசம்.. திடீரென லாட்ஜில் சரிந்த இளம்பெண்.. சென்னையில் பரபரப்பு!

பின்னர், அங்கு சென்ற பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தி கொலை செய்துவிட்டு, கடலில் வீசிவிட்டுச் சென்று உள்ளனர் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில், சிறுமியின் சகோதரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நீங்கதான் எனக்கு PRECIOUS… தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கட்டளை!

கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…

2 minutes ago

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

14 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

16 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

17 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

18 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

18 hours ago

This website uses cookies.