கொடைக்கானல் அருகே பேத்துபாறை பகுதி அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கொடைக்கானலை சேர்ந்த இளைஞர்கள் மாயமான நிலையில், அவர்களை தீயணைப்புதுறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் அஞ்சு வீடு அருவி அமைந்துள்ளது. இந்த அருவி பாதுகாப்பற்ற அருவியாகவும் இருந்து வருகிறது. இந்த அருவியைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தொடர்ந்து இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் விடுமுறை தினங்களில் சென்று வருவர். இந்த நிலையில் கொடைக்கானலை சேர்ந்த கோகுல் மற்றும் நசீர் ஆகிய இளைஞர்கள் அப்பகுதிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்று உள்ளனர். இதில் அருவியில் குளிக்க சென்ற போது, செங்குத்தான பாறையில் எதிர்பாராத விதமாக சிக்கி மாயமாகினர்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினர் ,காவல் துறையினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அருவியில் மாயமாகிய இளைஞர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் . இளைஞர்கள் மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
மேலும் குளிர் அதிகரித்து உள்ளதால் இளைஞர்களை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆபத்தாக இருக்கும் இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.