நீலகிரி : குன்னூர் அருகே தனியார் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி – குன்னூரில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பெட்போர்டு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆசிக் என்பவர் மாணவியை நோக்கி சென்றார்.
அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக, மாணவியை ஆசிக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதனால், காயமடைந்த மாணவி வலி தாங்க முடியாமல் துடித்தார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள், படுகாயமடைந்த மாணவியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாணவியை கத்தியால் குத்திய ஆசிக்கை, அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 26 வயதான ஆசிக் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.