திருவள்ளூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜித் (25) என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்து கை, கால்களை கட்டி முட்புதர் அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.
அவரது தந்தை பச்சையப்பன் என்பவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாகராஜ் கார்த்திக் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இருவர் அளித்த தகவலின் பேரில் கிணற்றில் இருந்து அஜித் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலையில் தொடர்புடைய மோகன், சாய், கணேஷ் சந்தேகத்துக்கிடமான வசந்தகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
மூன்று நாட்களாக கொலை செய்யப்பட்டு சடலம் கிணற்றில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிணற்றிலிருந்து இளைஞரின் உடல் எடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.