திருவள்ளூர் அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் இளைஞர் கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள காரனோடை பகுதியைச் சேர்ந்த சரத் பாபு (23) என்பவர் தனது மாமா ராஜ்குமார் வீட்டிற்கு சென்று விட்டு, பாட்டி மாரியம்மாள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக கொடூரமாக தலை மற்றும் முகத்தில் கொடூரமாக வெட்டி கொன்றது.
ரத்த வெள்ளத்துடன் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்ததை தொடர்ந்து, கொலை கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இந்தக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோழவரம் காவல்துறையினர் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சரத் பாபு அவரது நண்பரான மோகன் கஞ்சா விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் உள்ள மோகன், பிரபல ரவுடி முத்து சரவணன் கூட்டாளி என்பதால், ரவுடி முத்து சரவணன் கோஷ்டிக்கும், சேதுபதி கோஷ்டிக்கும் இடையே உள்ள முன் விரோதம் காரணமாக மோகனின் நண்பரான சரத்பாபுவை கொடூரமாக வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா போதையில் முன் விரோதம் காரணமாக இவரை வேறு யாரேனும் கொலை செய்தனரா என்பது குறித்தும், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சரத்பாபு மீது மீஞ்சூரில் மண் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ள நிலையில், அவரை கொலை செய்ததற்கான காரணம் கொலையாளிகள் கைது செய்யப்பட்டால், தான் உண்மை விவரங்கள் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.