Categories: தமிழகம்

3 குழந்தைகளுக்கு தாயான பெண்ணுடன் உல்லாசம் : இளைஞரை கண்டித்த கணவர்.. நள்ளிரவில் நடந்த விபரீதம்!!

கடலூர் : விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோமங்கலம் கிராமத்தில் மர்மமான முறையில் பெரியசாமி என்பவர் மகன் பழனிவேல் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விருத்தாசலம் காவல் துறைக்கு தகவல் கூறியதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பழனிவேலின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பழனிவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த 3 குழந்தைக்கு தாயான பெரியசாமி மனைவி வெண்ணிலாவுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் இதனால் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வந்ததாகவும் நேற்று இரவு இதுகுறித்து தகராறில் அந்த பெண்ணின் கணவர், மைத்துனர் மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து பழனிவேலை இரும்பு கம்பியால் அடித்து உதைத்ததாகவும் இரு தரப்பினரையும் பொதுமக்கள் விலக்கிவிட்டு சென்றதாகவும் அந்த பெண்ணின் கணவன் மற்றும்உறவினர்கள் பழனிவேலிடம் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பழனிவேல் இறந்து இருந்தது அவர்களின் உறவினர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விருத்தாசலம் காவல் துறையில் புகார் மனு அளித்து கொலையா தற்கொலையா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடலை கைப்பற்றி விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி சந்தேக மரணம் என்பதால் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

12 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

12 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

14 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.