ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் நந்திகொட்கூரில் நடைபெற்ற இந்த அதிர்ச்சிகர சம்பவத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றும் வேலையை மட்டுமே கவனித்து வந்த ராகவேந்திரா என்பவன் அதே ஊரில் பிளஸ் ஒன் படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறான்.
தன்னை காதலிக்குமாறு பலமுறை அவன் வலியுறுத்தி வற்புறுத்தி கூறியும் அந்த மாணவி அவனுடைய காதலை ஏற்காமல் மறுத்து இருக்கிறார்.
ஆவேசமடைந்த ஒரு தலை காதலன் ராகவேந்திரா அந்த மாணவி மட்டும் தனியாக இருந்த நேரத்தில் வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னுடைய காதலை எடுத்துக் கூறி சம்மதிக்க வைக்க முயற்சித்து இருக்கிறான்.
அப்போது அவன் ஏற்கனவே தீட்டிய ரகசிய கொலை திட்டத்தின் படி ஒரு பாட்டிலில் பெட்ரோலையும் மறைத்து எடுத்துச் சென்ற நிலையில் அந்த மாணவி தொடர்ந்து அவனுடைய காதலை ஏற்க மறுத்தார்.
இதையும் படியுங்க: சரியான அப்பா – அம்மாவுக்கு பிறந்திருந்தால் வழக்கு போடுயா…அண்ணாமலை சவால்!
இதனால் ஆவேசமடைந்த அந்த ஒருதலை காதலன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்து விட்டான்.
இதனால் உடலில் பற்றிய தீ அந்த மாணவி மீது மளமளவென பரவி தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்து விட்டார்.
மாணவி எழுப்பிய அபய குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது நடைபெற்ற பயங்கரம் தெரிய வந்தது.
அதே நேரத்தில் ராகவேந்திரா மீதும் தீ பற்றி அவனுடைய உடைகள் எரிந்து அவனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
அங்கு இருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்து வந்த போலீசார் ராகவேந்திராவை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.