தமிழகம்

பிளஸ் 1 மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்.. இளைஞர் வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் நந்திகொட்கூரில் நடைபெற்ற இந்த அதிர்ச்சிகர சம்பவத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றும் வேலையை மட்டுமே கவனித்து வந்த ராகவேந்திரா என்பவன் அதே ஊரில் பிளஸ் ஒன் படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறான்.

தன்னை காதலிக்குமாறு பலமுறை அவன் வலியுறுத்தி வற்புறுத்தி கூறியும் அந்த மாணவி அவனுடைய காதலை ஏற்காமல் மறுத்து இருக்கிறார்.

ஆவேசமடைந்த ஒரு தலை காதலன் ராகவேந்திரா அந்த மாணவி மட்டும் தனியாக இருந்த நேரத்தில் வீட்டுக்கு சென்று மீண்டும் தன்னுடைய காதலை எடுத்துக் கூறி சம்மதிக்க வைக்க முயற்சித்து இருக்கிறான்.

அப்போது அவன் ஏற்கனவே தீட்டிய ரகசிய கொலை திட்டத்தின் படி ஒரு பாட்டிலில் பெட்ரோலையும் மறைத்து எடுத்துச் சென்ற நிலையில் அந்த மாணவி தொடர்ந்து அவனுடைய காதலை ஏற்க மறுத்தார்.

இதையும் படியுங்க: சரியான அப்பா – அம்மாவுக்கு பிறந்திருந்தால் வழக்கு போடுயா…அண்ணாமலை சவால்!

இதனால் ஆவேசமடைந்த அந்த ஒருதலை காதலன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்து விட்டான்.

இதனால் உடலில் பற்றிய தீ அந்த மாணவி மீது மளமளவென பரவி தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்து விட்டார்.

மாணவி எழுப்பிய அபய குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது நடைபெற்ற பயங்கரம் தெரிய வந்தது.

அதே நேரத்தில் ராகவேந்திரா மீதும் தீ பற்றி அவனுடைய உடைகள் எரிந்து அவனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

அங்கு இருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்து வந்த போலீசார் ராகவேந்திராவை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.