தமிழகம்

புகாரை வாங்க போலீஸ் மறுப்பு? பாட்டிலுடன் காவல் நிலையம் வந்த இளைஞர்.. திடீரென எடுத்த விபரீத முடிவு!

சென்னை, ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு நேற்று இரவு 9.15 மணியளவில், ஒரு பாட்டிலுடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். பின்னர், திடீரென அந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர், இதைப் பார்த்த போலீசாரும், பொதுமக்களும் உடனடியாக அந்த இளைஞா் மீது தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டனர். இதனையடுத்து, பலத்த காயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்த போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற நபர், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜன் (30) என தெரிய வந்துள்ளது. மேலும், ராஜனை அவரது நண்பர்கள் இருவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புகார் அளிப்பதற்காக ராஜன் காவல் நிலையம் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: விஜயின் முக்கிய குற்றச்சாட்டு.. தீயாக பரவிய தகவல்.. ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு!

ஆனால், அவரது புகாரை போலீசார் வாங்க மறுத்த‌தாக கூறப்படும் நிலையில், திடீரென போலீஸ் ஸ்டேஷன் வாசலில், தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு ராஜன் தீ வைத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் ராஜனின் உறவினர்கள் குவிந்த‌தால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

(குறிப்பு: எந்தவொரு நிலையிலும், நிலைக்கும் தற்கொலை தீர்வல்ல)

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.