புதுச்சேரி : புதுச்சேரி அருகே இளைஞர் ஒருவர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த மூலகுளம் பகுதியில் சீனிவாசன்(எ)மூர்த்தி (31) தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை வீட்டு விட்டு வெளியே சென்று பின்னர் மீண்டும் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் சேர்ந்தநத்தம் சுடுகாட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடப்பதாக இன்று வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கொலை செய்யப்பட்டது சீனிவாசன்(எ)மூர்த்தி என்பதும் தெரியவந்தது. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நண்பர்களிடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா? இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.