திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையம்,திண்டுக்கல்-தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் மதுரை-பெரியகுளம்,திண்டுக்கல்-தேனி, திண்டுக்கல்-உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை வத்தலகுண்டு காவல் துறையினர் வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் சந்தேகத்தின் பேரில் தேவதானப்பட்டி பட்டியலின டிரம்செட் கலைஞர்களான கரண்குமார்(25), தவம் (26), பாலமுருகன்(24) ஆகியோரை பிடித்து வத்தலக்குண்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் சட்டவிரோதமாக வைத்து துன்புறுத்தியதில் மூன்று இளைஞரில் கரண்குமார் துன்புறுத்தல் தாங்க முடியாமல் காவல் நிலைய மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் குவிந்த 50-க்கும் மேற்பட்ட கரன்குமாரின் உறவினர்கள், இளைஞர்கள் மூவரும் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தக்காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் ட்ரம்செட் கலைஞர்களான கரன்குமார் உட்பட சாலையில் சென்ற மூவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்த வத்தலக்குண்டு காவல்துறையினர் உரிய முறையில் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய கடுமையாக தாக்கி துன்புறுத்தியதில் கரண்குமாருக்கு மர்ம உறுப்பு பகுதியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் காவல்துறையினர் தற்கொலை முயற்சியாக சித்தரிக்க முயல்வதாகவும் எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.