கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை, விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
அவர் தனது நண்பர்கள் 5 பேருடன் அறையில் தங்கி இருந்தார் அப்பொழுது அவருடைய வீட்டிற்குள் திடீரென ஆறு பேர் கொண்ட கும்பல் புகுந்தது.
இதையும் படியுங்க: திமுகவிடம் அடகு வைக்கப்பட்ட காங்கிரஸ்.. மூத்த தலைவர்களை விமர்சித்தால்.. தீவிரமடையும் உட்கட்சி விவகாரம்!
அவர்கள் தேவ் தர்சன் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி மூன்று பவுன் தங்க நகை, செல்போன், மடிக்கணினி ஆகியவை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கு இடையே போலீசார் வாகன சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மோகன்தாஸ், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜின் என்பதும் அவர்கள் தேவ் தர்சன் வீடு புகுந்து நகை, செல்போன் பறித்ததும் தெரியவந்தது.
உடனே அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவில்பாளையத்தில் வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி நகை, செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.