பழனி நகரில் இரவு நேரத்தில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட குறும்பபட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் தெருக்களில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதனை அடுத்து ஆயுதங்களை எடுத்துச் செல்லும் சிறார்கள் குறித்து பழனி நகர போலீசார் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் பழனி தெற்கு அண்ணா நகரை சேர்ந்த ஸ்ரீகுமார், சந்துரு என்ற இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு சாலையில் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வீடியோ காட்சியில் உள்ள சில இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.