திருச்சியில் பைக்கின் முன்பு வெடி கட்டி பைக் வீலிங்கில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தஞ்சை வாலிபர் உட்பட மாவட்டத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்ட புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதுவரை 4 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பைக் முன்பு வெடிகளை கட்டி பைக் விலையில் ஈடுபட்ட அஜய் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் மணிகண்டன் கைது செய்யப்பட்டு அவருடைய இருசக்கர வாகன பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து திருச்சியில் மாவட்டத்தில் பைக்கில் வீலிங் ஈடுபட்ட ஜீயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட பர்ஷத்அலி(21), அஜித்(21), அஜய்(20) சக்திவேல் (20) அஜய்(24), மற்றும் இலால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் வீலிங்கில் ஈடுபட்ட அருள்முருகன்(24), விஜய்(18), கிரித்திஸ்(20), வசந்தகுமார் (20), பெருமாள் என்ற தேசிங்க பெருமாள்(18), முகமது ரியாஸ்தீன்(22) ஆகியோர் மீது சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்க அனுப்ப்பட்டுள்ளனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651க்கு தெரியப்படுத்துமாறு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.