கோவையில் தொடர் விலையுயர்ந்த இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர்களை தேடி வந்த நிலையில், போலீசார் பீளமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வந்த இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, மற்றும் அபிஷேக் குமார் என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் மூன்றும், விலை உயர்ந்த கே.டி.எம் இருசக்கர வாகனம் என 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.