கோவையில் தொடர் விலையுயர்ந்த இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர்களை தேடி வந்த நிலையில், போலீசார் பீளமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வந்த இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, மற்றும் அபிஷேக் குமார் என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் மூன்றும், விலை உயர்ந்த கே.டி.எம் இருசக்கர வாகனம் என 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.