எதிர்பாராத வகையில் ஏர்டெல் வழங்கும் குறைந்த விலை ப்ரீபெய்டு திட்டங்கள் இந்தியாவில் கிடைக்கிறது
17 August 2020, 2:31 pmதேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் இந்த ஆண்டு மே மாதத்தில் ஏர்டெல் வரம்பற்ற அழைப்புக்கான வசதியோடு ரூ.129 மற்றும் ரூ.199 ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இப்போது டெலிகாம் ஆபரேட்டர் தனது ரூ.129 மற்றும் ரூ.199 ப்ரீபெய்டு திட்டங்களை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.
ரூ.129 மற்றும் ரூ.199 ப்ரீபெய்டு திட்டங்களுடன், ஏர்டெல் ரூ.99 ப்ரீபெய்டு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது, ஆனால் இந்த திட்டம் இன்னும் சில வட்டங்களுக்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதம், டெல்லி என்.சி.ஆர், அசாம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட், மும்பை, வடகிழக்கு, ஒடிசா, குஜராத், ஹரியானா, கேரளா, கொல்கத்தா, மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் கோவா, ராஜஸ்தான், உ.பி. கிழக்கு, உ.பி. மேற்கு மற்றும் உத்தரகண்ட், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய வட்டங்களில் ரூ.129 மற்றும் ரூ.199 ஏர்டெல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் கிடைத்தன.
ஏர்டெல் ரூ.129 திட்டம் வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது, மேலும் இது 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் மொத்த தரவு 1 ஜிபி உடன் 300 எஸ்எம்எஸ் ஆகியவைச் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் ரூ.199 திட்டம் ஆனது 24 நாட்கள் செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
இரண்டு திட்டங்களிலும் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அணுகல் ஆகியவை அடங்கும்.
புதிய ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பை வாங்குவதன் மூலம் ஏர்டெல் 1000 ஜிபி இலவச கூடுதல் தரவை வழங்குகிறது. வரையறுக்கப்பட்ட கால சலுகை அனைத்து ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களுக்கும் பொருந்தும் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் அனைத்து சிறந்த நகரங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.