புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூகிள் பிளே ஸ்டோர் பாலிசியானது மே 11 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. புதிய பாலிசியின்படி, Google இன் அணுகல்தன்மை APIகளைப் பயன்படுத்தி கால் ரெக்கார்டிங் இனி அனுமதிக்கப்படாது. அணுகல்தன்மை இல்லாததால் ஆண்ட்ராய்டின் அணுகல்தன்மை APIகளைப் பயன்படுத்தும் ஆப்களை ஒடுக்குவதற்கான தொழில்நுட்ப நிறுவனங்களின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது உள்ளது. ஆண்ட்ராய்ட் போன்களில் இயங்கும் மூன்றாம் தரப்பு ஆப்
களுக்கு, அணுகல்தன்மை APIகள் (Accessibility APIs) கால் ரெக்கார்டிங் செய்வதற்கான ஒரே வழி.
கூகுள் தனது சாதனங்கள் மற்றும் சாஃப்ட்வேர் களைப் பயன்படுத்தி பிரச்சினை ஏற்படுபவர்களுக்கு உதவுவதற்காக அணுகல்தன்மை API களை வடிவமைத்துள்ளது. ஆனால் இது கால் ரெக்கார்டிங் நோக்கங்களுக்காக அல்ல.
இருப்பினும், கூகுளின் ஆப் ஸ்டோரில் கால் ரெக்கார்டிங் செய்யும் ஆப்கள் தடைசெய்யப்பட்டாலும், பயனர்கள் தொடர்ந்து அவற்றை அணுகுவார்கள். ஏனென்றால், ஆண்ட்ராய்டு இயங்குதளமானது, ஆப்பிளின் ஐஓஎஸ் போலல்லாமல், மற்ற ஸ்டோர்களில் இருந்து ஆப்களை அணுக அதன் பயனர்களை அனுமதிக்கும் திறந்த ஒன்றாகும். சைட்லோடிங் என அழைக்கப்படும் இந்த நடைமுறையானது, நுகர்வோருக்கு பாதுகாப்பற்றது. ஏனெனில் இது சாத்தியமான பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்களுக்கு அவர்களைத் தள்ளுகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையில், இன்பில்ட் கால் ரெக்கார்டிங் ஆப்களை வழங்கும் Samsung மற்றும் Xiaomi ஸ்மார்ட்போன்கள் தங்களது சேவைகளை தொடர முடியும். இந்த பாலிசியானது நேட்டிவ் கால் ரெக்கார்டிங் ஆப்பை பாதிக்காது என்று கூறியது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.