குறைந்த விலையில் காற்றோட்ட சாதனம் உருவாக்கம் | ஐ.ஐ.டி-புவனேஸ்வர் மாணவர்கள் முயற்சி வெற்றி
19 September 2020, 6:10 pmIIT புவனேஸ்வர் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு ஒரு புதிய காற்றோட்ட சாதனத்தை உருவாக்கியுள்ளது, இது லேசான சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, குறிப்பாக COVID-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த சாதனம் குறித்து கூறிய மாணவர்கள், இது தலைக்கு ஒரு குமிழி உறை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சையின் கொள்கையில் செயல்படுகிறது என்று தெரிவித்தனர். உடலின் குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு ஒரு நபருக்கு கிட்டத்தட்ட தூய ஆக்ஸிஜனை உள்ளிழுக்கவும் இது உதவுகிறது. ‘ஸ்வாஸ்னர்’ (Swasner) என்று பெயரிடப்பட்ட இது அவசரகால சூழ்நிலையில் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வழியாக செயல்பட முடியும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (CIPET) இலிருந்து வாங்கப்பட்ட மருத்துவ துறை சார்ந்த பிளாஸ்டிக்கால் ஆன இந்த சாதனம் இரண்டு பிளாஸ்டிக் வளையங்களைக் கொண்டுள்ளது. இது பயனரின் கழுத்தில் டி-ஷர்ட் போன்ற பிடிப்பைக் கொண்டிருப்பதாகவும் ஒரு வட்ட வடிவ மேக்கிண்டோஷ் துணியால் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மையான ஆக்ஸிஜன் செலுத்தப்படும் குமிழி போன்ற அடைப்பு சாதனத்தின் கீழ்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனைகளில் சுவரில் பொருத்தப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் இதை இணைக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சாதனம் விலையுயர்ந்த வென்டிலேட்டருக்கு மலிவு மாற்றாக பயன்படுத்தப்படலாம் என்று கூறி, கட்டாக் மற்றும் மும்பையில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐ.ஐ.ஐ.டி புவனேஸ்வர் மற்றும் ITER இன் ஜிவிதேஷ் தெபாட்டா மற்றும் NSIT டெல்லியின் நந்த் கிஷோர் குப்தா ஆகியோரும் மாணவர்களான அனன்யா அப்ரமேயா, தபஸ்வின் பாதி, சித்தார்த் சங்கர் நாயக், சாய் சம்பிட் நாயக், திவ்யஜயோதி டாஷ், ஷோவிட் மித்ரா மற்றும் விட்டல் குப்தா ஆகியோர் இதை வடிவமைக்க நான்கு மாதங்கள் ஆனதாகவும் தெரிவித்தனர்.