டாப் நியூஸ்

கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டித் தூக்கிய வேன்.. ஒருவர் பலி!

திண்டுக்கல் குஜிலியம்பாறை அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல்: கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மாலப்பட்டியைச் சேர்ந்தவர் மதுபாலன். 23 வயதான இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் சிவா. இந்த நிலையில், இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் வேடசந்தூர் அருகே உள்ள பாளையத்திற்கு வந்துவிட்டு, மீண்டும் கடவூர் நோக்கிச் சென்றனர்.

அப்போது இருசக்கர வாகனத்தை மதுபாலன் ஓட்டிச் சென்றார். சிவா பின்னால் உட்கார்ந்து சென்றார். இந்த நிலையில், குஜிலியம்பாறை அருகே உள்ள முத்தம்பட்டி பிரிவு பகுதியில், இருசக்கர வாகனம் சென்றபோது எதிரே வந்த மகேந்திரா வேன் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மதுபாலன் மற்றும் சிவா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சையில் இருந்த மதுபாலன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க : ஸ்டாலினுக்கு எடப்பாடியே பரவால்ல.. செல்லூர் ராஜூ தடாலடி!

மேலும், சிவா தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, இது குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.