டாப் நியூஸ்

கஸ்தூரி தலைமறைவா? தீவிரமாகத் தேடும் போலீசார்!

தெலுங்கு பெண்களை இழிவாக பேசியதாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்மன் கொடுக்கச் சென்ற போது நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை தொடர்ந்து எதிர்த்து கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தெலுங்கு பேசக்கூடிய பெண்களை இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக சென்னை மட்டுமின்றி, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் பெண்கள் மற்றும் தெலுங்கு சமூக அமைப்புகள் புகார்கள் அளித்து வந்தனர். இந்த புகார்களின் எண்ணிக்கை மறுநாள் அதிகரிக்கத் தொடங்கி, மாநில செய்தி மேடையில் அரசியல் கவனமும் பெற்றது.

அந்த வகையில், தெலுங்கு பேசுபவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க திட்டமிட்டனர். இதன்படி, இன்று கஸ்தூரிக்கு சம்மன் வழங்க போலீசார் சென்றபோது, போலீசார் வருவதற்கு முன்னதாகவே, அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு உள்ளதால், போலீசார் சம்மனை வீட்டு சுவற்றில் ஒட்டிவிட்டுச் சென்று உள்ளனர். மேலும், கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ்.. காலமெல்லாம் பேர் சொல்லும் சாதனைகள் என்னென்ன?

முன்னதாக, பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால் தான் இங்கு தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று யாரும் வைக்க முடியவில்லை” எனப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.