டாப் நியூஸ்

கஸ்தூரி தலைமறைவா? தீவிரமாகத் தேடும் போலீசார்!

தெலுங்கு பெண்களை இழிவாக பேசியதாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்மன் கொடுக்கச் சென்ற போது நடிகை கஸ்தூரி வீட்டில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை தொடர்ந்து எதிர்த்து கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தெலுங்கு பேசக்கூடிய பெண்களை இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக சென்னை மட்டுமின்றி, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் பெண்கள் மற்றும் தெலுங்கு சமூக அமைப்புகள் புகார்கள் அளித்து வந்தனர். இந்த புகார்களின் எண்ணிக்கை மறுநாள் அதிகரிக்கத் தொடங்கி, மாநில செய்தி மேடையில் அரசியல் கவனமும் பெற்றது.

அந்த வகையில், தெலுங்கு பேசுபவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க திட்டமிட்டனர். இதன்படி, இன்று கஸ்தூரிக்கு சம்மன் வழங்க போலீசார் சென்றபோது, போலீசார் வருவதற்கு முன்னதாகவே, அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு உள்ளதால், போலீசார் சம்மனை வீட்டு சுவற்றில் ஒட்டிவிட்டுச் சென்று உள்ளனர். மேலும், கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ்.. காலமெல்லாம் பேர் சொல்லும் சாதனைகள் என்னென்ன?

முன்னதாக, பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால் தான் இங்கு தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று யாரும் வைக்க முடியவில்லை” எனப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

14 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

15 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

15 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

15 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

16 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

17 hours ago

This website uses cookies.